பிரண்டை மூலிகை குணங்கள்

உடலில் உள்ள எந்த பகுதியில் எந்த நோய் ஏற்பட்டாலும் அந்நோயை அகற்றும் மகா ஆற்றல் கொண்டது. பிரண்டைத் துவையல் பசியைத் தேடுபவர்களுக்கு கைகண்ட அனுபவமிக்க மாமருந்தாகும் . அல்சர் (வயிற்றுப் புண்) நோய் உள்ளவர்கள் அதிகம் பயன்படுத்தக்கூடாது . அல்சர் அதிகமாகி விடும் . அல்சர் குணமான பிறகு தாராளமாக பயன்படுத்தலாம் .திரும்பவும் அல்சர் நோய் வரவே வராது

* எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்கள். பிரண்டைத் துவையலை அதிகம் பயன்படுத்திக் கொண்டே வந்தால் முறிந்த எலும்புகள் விரைவில் ஒன்று கூடி மிகவும் பலம் பெற்று குணமாகும் . குளிர்ச்சியால் ஏற்படும் சளியை குணமாகும்.
*குடல்களில் ஏற்படும் வாயுக்களை அகற்றும். மற்றும் வயிற்றிலுள்ள விஷ நுன் புழுக்களை கொன்று விடும் . பேதி. வாந்தி. சீதபேதி. நுரைத்த பச்சை பேதி காணும் சிறுவர்களுக்கும். பெரியவர்களுக்கும் கூட காரம் குறைத்து செய்த துவையலை தரலாம். உண்ணும் போது முழுமையான குணம் தெரியும். வாய்புண். வாய் நாற்றம். நாக்கு. உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் குணம் ஆகும். மலத்துடன் வீணாக ரத்தம் வெளியேறும் சிலருக்கு இதைப் பயன்படுத்தும் போழுது குணமாகி விடும். சூதக சம்பந்தப்பட்ட அனைத்து வலிகளும் தீரும்
*பிரண்டைத் துவையலை தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது. நரம்புத் தளர்ச்சி. பலவீனம். தாது இழப்பு தீரும்.

No comments:

Post a Comment