இனிமேல் சூடுபண்ணி சாப்பிடாதீங்க !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp இனிமேல் சூடுபண்ணி சாப்பிடாதீங்க... அதுவே விஷமா மாறிடும்...! சு+டுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள்!! ➠ இன்றைய நாகரிக வாழ்க்கை முறையில் ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற நவீன மின்னணுச் சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. விளைவு, தேவையான போது சமைத்துச் சாப்பிட்டது போய், தேவைக்கு அதிகமாகவே உணவைச் சமைத்து, ஃப்ரிட்ஜில் வைத்து கொள்கிறோம். அதை விரும்பும் போது மீண்டும் சு+டுபடுத்தி சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. ➠ இப்படிச் சு+டுபடுத்தி சாப்பிடுவதால், அதிலுள்ள சத்துகள் குறைந்து போய்விடும். அதுவே உடல் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். உயிருக்கே உலைவைத்துவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள். அந்த வகையில் மீண்டும் சு+டுபடுத்தி சாப்பிடவே கூடாத உணவுகள் பற்றித் தெரிந்துகொள்வோம். சிக்கன் : ➠ கோழி இறைச்சியில் அதிகளவு புரதச்சத்து உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம் ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் சு+டுபடுத்தும் போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும்; அதையே இரண்டாவது முறை சு+டு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும். கீரை : ➠ கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் சு+டுபடுத்தும் போது நைட்ரைட்டாக மாறும். கீரை உணவுகளை மீண்டும் சு+டுபடுத்தி சாப்பிடுவதால், செரிமான பிரச்சனைகள் உண்டாகும்; குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். முட்டை : ➠ முட்டை அதிக புரதச்சத்து நிறைந்த உணவு. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சு+டுபடுத்தினால், செரிமான பிரச்சனை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். சாப்பாடு : ➠ அரிசி நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஓர் உணவுப் பொருள். சாதத்தை மீண்டும் சு+டுபடுத்தி சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, ஃபுட் பாய்சனாக மாறிவிடும். காளான் : ➠ காளானைச் சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரதச்சத்து அதிகமாக உள்ளது. இதை, இரண்டாம் முறை சு+டுபடுத்தும் போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும். உருளைக்கிழங்கு : ➠ உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும் போது சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்படிச் செய்யும் போது சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கிவிட வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக நச்சுத் தன்மை உள்ளதாக மாறிவிடும்; வாந்தி, குமட்டல் உடல்நல பாதிப்பு எல்லாம் ஏற்படும். சமையல் எண்ணெய் : ➠ எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சு+டுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். இது புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாகவும் அமையும். இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

No comments:

Post a Comment