திதியில் பிறந்த பலன் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp நீங்கள் எந்த திதியில் பிறந்தவர்கள்? இதுதான் உங்கள் குணம்! நீங்கள் பிறந்த திதிகளின் பலன்கள் !  வளர்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும், தேய்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும் வருகின்றன. இந்தப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் பௌர்ணமியும் மாதமொரு முறை மாறி மாறி வந்து போகின்றன. இப்படி வரும் திதிகளின் பிறந்த பலன்களை அறிந்துக் கொள்வோம். 🌠 பிரதமையில் பிறந்தவர்கள், எதையும் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும் ஆற்றல் உடையவர்கள். 🌠 துவிதியையில் பிறந்தவர்கள், உண்மையை பேசுபவர்கள். பொய் பேச மாட்டார்கள். 🌠 திருதியையில் பிறந்தவர்கள், தான் நினைக்கும் காரியத்தை செய்து முடிப்பவர்கள். 🌠 சதுர்த்தியில் பிறந்தவர்கள், மந்திர சக்தியில் விருப்பம் உடையவர்கள். 🌠 பஞ்சமியில் பிறந்தவர்கள், பொன் ஆசை உடையவர்கள். 🌠 சஷ்டியில் பிறந்தவர்கள், செல்வர் ஆக விருப்பப்படுவார்கள். 🌠 சப்தமியில் பிறந்தவர்கள், மற்றவர்களின் மேல் இரக்க குணம் உடையவர்கள். 🌠 அஷ்டமியில் பிறந்தவர்கள், குழந்தைகளிள் மேல் மிகவும் அன்பு உடையவர்கள். 🌠 நவமியில் பிறந்தவர்கள், அதிக புகழ் பெறுவதில் நாட்டம் உடையவர்கள். 🌠 தசமியில் பிறந்தவர்கள், ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக விளங்குவார்கள். 🌠 ஏகாதசியில் பிறந்தவர்கள், பொருள் ஈட்டுவதில் இவர்களின் எண்ணம் இருக்கும். 🌠 துவாதசியில் பிறந்தவர்கள், புதுமையான தொழில் செய்வதில் அதிக ஆர்வம் உடையவர்கள். 🌠 திரயோதசியில் பிறந்தவர்கள், உறவினர்களிடம் அதிகம் பேச மாட்டார்கள். 🌠 பௌர்ணமியில் பிறந்தவர்கள், தௌpவான சிந்தனை உடையவர்கள். 🌠 அமாவாசையில் பிறந்தவர்கள், தன் அறிவை மேலும் பெருக்கிக்கொள்வதிலேயே ஆர்வம் உடையவர்களாக இருப்பர். ழூ குறிப்பு : நித்ரா ஜோதிடரால் வழங்கப்பட்ட உங்களின் சந்தேகங்களுக்கான பதில்கள் Pனுகு வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள். இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

No comments:

Post a Comment