உலகத்தின் உயிரே !

           உலகத்தின் உயிரே !
           =====+++++++++++==
உலகில் நீ இல்லாது
உலகுக்கு உயர்வுண்டோ

உலகை காப்பதும் நீ
உயிர்களின் சுவாசமும் நீ

இறைவனின்
உன்னத படைப்பில்
உயர்ந்த படைப்பு நீ

காற்று என்று
உன் பெயர்
கொண்டாய்_ஏன்?
கண்களுக்கு தெரியாமல்
நீ இருக்காய் !

உயிர்களை இயக்கும்
சூத்திரம் நீ !

உணர்த்திட கூடிய
தெய்வமும் நீ

தென்றல் ' புயல் '
இரு உருவம்
கொண்டாய் !
இருந்தும் தீங்கின்றி
காத்தாய் !

அடித்தாலும் நீதான்
உயிர்களை
அனைப்பதும் நீ

அன்னைக்கும் அன்னை
 நீ
இறைக்குள் இறையும்
நீ

மனிதன் உன்னை
மாசு படுத்தினாலும்
மாசில்லா புனிதம்
நீ

காற்று என்றால் சுவாசம்
காற்று என்றால் உயிர்
காற்று என்றால் இயக்கம்
காற்று என்றால் இறைவன்

இதை உணராத மனிதா!
காற்றை
வணங்க மறந்தாலும்
மாசு படுத்த எண்ணாதே !

காற்று அனைத்து
உயிருக்கும் போது !
அதை!
மனித இனம்
காப்பதே மேல் !

காக்க காக்க காற்றினை காக்க !
போக்க போக்க மாசுவை போக்க !

வையம் செழிக்க காற்றை !
பாதுக்காப்பது நன்று !

No comments:

Post a Comment