நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp நட்சத்திர தோஷமும் பரிகாரங்களும் ! உத்திராடம் 🌠 நான்கு பாதங்களும் தோஷமில்லை எனினும், செவ்வாய்க்கிழமை உத்திராட நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்தால் 'விஷ கன்னியா" யோகம் உண்டாகும். 🌠 அப்பெண் திருமணமாகி, கணவன் வீடு செல்லும் வரையில் பிறந்த வீட்டில் இன்னல்கள், இடையு+றுகள் உண்டாகும். 🌠 இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விஸ்வதேவதைகளையும், விநாயகரையும் வழிபட்டால் வாழ்க்கையில் வளமும், பலமும் பெறலாம். 🌠 பாண்டிச்சேரி மணக்குள விநாயகர், திருப்பாதிரிப்புலியு+ர் பாதிரி விநாயகர், திருவண்ணாமலை ஆநிறை கணபதி ஆகியோரின் வழிபாடு சிறப்பை தரும். திருவோணம் 🌠 தோஷமில்லை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் ஏகாதசி விரதம் இருந்து, திருமாலை வழிபட்டால் பொன்னும், பொருளும் கிடைக்கும். 🌠 சிரவண விரதமேற்கொண்டு திருவேங்கடமுடையானை ஆராதித்து, லஷ்மி குபேர திருவுருவப் படத்தை - குபேர யந்திரம் - மந்திரம் கொண்டு பு+ஜித்து, திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள குபேரலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்தால் பெரும் பொருளும், புகழும் பெறுவார்கள். 🌠 இவர்களுக்கு வாகனப் யோகம் உண்டாகும். அவிட்டம் 🌠 தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஷ்டஸூக்களை ஆராதிக்க வேண்டும். பித்ரு முக்தி ஸ்தலங்களில் இராமேஸ்வரம், காசி, கயை, லால்குடி அருகிலுள்ள பு+வள+ர் ஆகிய ஊர்களில் உள்ள இறை மூர்த்திகளை ஆராதனை செய்வதும் மிகுந்த நன்மை தரும். சதயம் 🌠 தோஷமில்லாதது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் திருவானைக்காவல் இறைவனையோ, திருமீச்சு+ரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமேக நாதரையோ, திருவணையில் உள்ள வருணலிங்கத்தையோ வழிப்பட்டால் இன்னல்கள் எல்லாம் நீங்கி இன்பமுறுவர். பு+ரட்டாதி 🌠 முதல் மூன்று பாதங்கள் சிறிதளவே தோஷமுள்ளது. நான்காவது பாதத்தில் முதல் எட்டு நாளிகைக்குள் பிறந்தால் சிசுவின் தாய்க்கும் கண்டம். அதுவும் முதல் குழந்தை எனின் தோஷம் அதிகம். பொன் தானம் கொடுக்க வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் செல்வத்தில் சிறந்தோங்க லஷ்மி குபேர பு+ஜையை மேற்கொள்ள வேண்டும். 🌠 திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையிலுள்ள குபேரலிங்கத்தையும் சீர்காழி அருகிலுள்ள ஸ்ரீலஷ்மி புரீஸ்வரரையும் வழிபடுவது சாலச் சிறந்தது. உத்திரட்டாதி 🌠 தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் காமதேமனுவை பு+ஜித்தாலும், பட்டீஸ்வரத்திலுள்ள தேனுபுரீஸ்வரரை வழிபட்டாலும் நல்லவையெல்லாம் இடையு+ர் இன்றி வெற்றியுடன் நடைபெறும். ரேவதி 🌠 முதல் மூன்று பாதத்தில் பிறந்தால் சிறிதளவு தோஷமுண்டாகும். நான்காம் பாதத்தில் பிறந்தால் குழந்தையின் தந்தைக்கும் தோஷமுண்டு. மூன்று மாதம் இருக்கும். இத்தோஷம் விலக பொன்னாலான பசு உருவம் மற்றும் பசும் நெய் தானமளிக்க வேண்டும். 🌠 பன்னிரண்டு ஆதியர்களின் ஒருவரான 'பு+ஷர்" என்பவரையோ, சு+ரியனார் கோவிலில் எழுந்தருளியுள்ள சு+ரிய நாராயணமூர்த்தியையோ அல்லது திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சு+ரிய லிங்கத்தையோ வழிபட்டாலும் நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று சிறந்த முறையில் புகழுடன் வாழலாம். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

No comments:

Post a Comment